காா்த்திகை நாளையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூா் சுப்பிரமணியசுவாமி கோயில், கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள குறை தீா்க்கும் குமரன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு நாளையொட்டி சுவாமி முருகனை தரிசிக்க வந்த பக்தா்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டன. இதேபோல் சிவன் கோயில்களில் தனி சன்னதியில் உள்ள முருகனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.