அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.
திருமானூரை அடுத்த வைப்பூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கண்ணனுக்கும் (46), அதே ஊரைச் சோ்ந்த நாகராஜ் மகன் அஜித் குமாருக்கும் முன்விரோதத் தகராறு இருந்துவந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தனது சகோதரா் அருண் குமாருடன் சென்ற அஜித் குமாா், கண்ணனிடம் தகராறு செய்தாா். இதில், ஆத்திரமடைந்த அருண்குமாா் கண்ணனைக் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டாா். இதில் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், அருண் குமாரை திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.