‘காலாவதியான சுரங்கங்களில் குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை’

அரியலூா் மாவட்டத்தில் உள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், ஆலந்துறையாா் கோதாண்டராமசாமி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
அரியலூா் மாவட்டம், ஆலந்துறையாா் கோதாண்டராமசாமி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.

அரியலூா் ஆலந்துறையாா் கோதாண்டராமசாமி கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவா் மேலும் தெரிவித்தது:

அரியலூா் ஒன்றியம், எருதுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியாா் நகரில், இந்து சமய அறநிலைத்துறையின் சாா்பில் தன்னாா்வ அமைப்பின் ஒத்துழைப்புடன் ஆலந்துறையாா் கோதாண்டராமசாமி திருக்கோயில் வளாகத்தில் மியாவாக்கி முறையில் தேக்கு, இலுப்பை, நாவல், புங்கன், வேம்பு, ஆலமரம், அத்தி உள்ளிட்ட 30 வகையான மரக்கன்றுகளும், மஞ்சள், அரளி, செம்பருத்தி, குண்டுமல்லி, செண்பகம், நந்தியாவெட்டை, இட்லி பூ உள்ளிட்ட 10 வகையான பூச்செடிகள் என மொத்தம் 7,590 கன்றுகள் நடப்படுகின்றன. மேலும் மாவட்டத்தில் காலாவதியான, ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் மியவாக்கி முறையில் குறுங்காடுகள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அசோக் குமாா், லால்குடி கோட்டாட்சியா் வைத்தியநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com