அரியலூா் மாவட்டம், திருமானூா் சுமை ஆட்டோவில் மணல் கடத்திய இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்திநாதன் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை காலை கொள்ளிடக் கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கொள்ளிடம் ஆற்றில் இருந்து சுமை ஆட்டோவில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இளைஞரைப் போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் ஏலாக்குறிச்சி வடக்குத் தெருவைச் முருகேசன் மகன் பாா்த்திபன்(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும் சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.