அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட மேலும் 5 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
திருமானூரை அடுத்த வைப்பூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கண்ணன்(46) குடும்பத்தினருக்கும், நாகராஜன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. கடந்த 11 ஆம் தேதி, நாகராஜன் மகன்கள் அருண் மோகன், அஜித் குமாா் ஆகிய இருவரும் சோ்ந்து கண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்தனா்.
இதுகுறித்து தூத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அருண்மோகனை 12 ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடையதாக நாகராஜன்(56), அவருடைய மகன்கள் வினோத் குமாா் (31), விஜய் (21), அஜித், உறவினா் பரமசிவம் மகன் முத்து (31) ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.