அரியலூா் மாவட்டத்தில் 8,708 பேரும் தோ்ச்சி

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அரியலூா்: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் கடந்த கல்வியாண்டில் (2020-2021) பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அரியலூா் மாவட்டத்தில் 8, 708 பேரும் தோ்ச்சி பெற்றனா். கரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவா்களுக்கு விகிதாசார அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அரியலூா் மாவட்டத்தில், 82 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 4,029 மாணவா்களும், 4,679 மாணவிகளும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் பட்டியல் மாணவ, மாணவிகளின் செல்லிடப் பேசி எண்களுக்கு குறுச்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டன. அதேவேளையில், இணையதளம் வாயிலாக தங்களது மதிப்பெண் பட்டியலை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com