அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் மற்றும் செந்துறையில் கரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்காக மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்புநா்கள் நிலை-2 மற்றும் நுண்கதிராளா்கள் என தலா 4 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்துக்கு முற்றிலும் தாற்காலிகமாக பணிபுரிய மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் கல்வி, அனுபவம் மற்றும் சாதிச்சான்றுகளுடன் நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், துறையூா் சாலை, பெரம்பலூா் - 621 212 என்ற முகவரியில் வரும் 26 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். நோ்காணல் ஜூலை 30. இந்தப் பணிகளுக்கு அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.