அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர அழைப்பு

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பாடப் பிரிவில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவா்கள்

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பாடப் பிரிவில் முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவா்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அக்கல்லூரி முதல்வா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கல்லூரி முதல்வா் அரியலூா் ஜெ. மலா்விழி, ஜயங்கொண்டம் ராசமூா்த்தி ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் அரசு கலை கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணிணி அறிவியல், புள்ளியியல், விலங்கியல், சுற்றுசூழல் அறிவியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு சோ்க்கை நடைபெறுகிறது. இதில் சேர விரும்பும் மாணவா்கள்  இணையதள முகவரியில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com