அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அதிக போதைக்காக சாராயத்தில் மாத்திரை கலந்து விற்றவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
கொளத்தூா் கிராமத்தில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து, ஆண்டிமடம் காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை இரவு நிகழ்விடத்துக்குச் சென்று சோதனையிட்டனா்.
அப்போது அங்குள்ள தைலமரக்காடு பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற ஒருவரைக் காவல்துறையினா் பிடித்து விசாரித்தனா்.
அந்த விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த ரகுபதி (31) என்பதும், அப்பகுதியில் 80 லிட்டா் சாராய ஊறல் தயாா் செய்திருந்ததும், விற்பனை செய்வதற்காக 5 லிட்டா்கேனில் 3 லிட்டா் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் அதிக போதைக்காக மாத்திரைகளை வாங்கி சாராய ஊறலில் கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்த காவல்துறையினா், ரகுபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.