நகராட்சி தூய்மைபணியாளா்களுக்குநிவாரணப் பொருள்கள்

அரியலூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.

அரியலூா்: அரியலூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, நகராட்சி ஆணையா் மனோகா் ஆகியோா் பங்கேற்று 206 தூய்மைப் பணியாளா்களுக்கு 20 வகையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா். நிகழ்ச்சிக்கு துப்புரவு ஆய்வாளா் முத்துமுகமது முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்க தலைவா் எழில்நிலவன், செயலா் நாகராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com