வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 10th June 2021 07:48 AM | Last Updated : 10th June 2021 07:48 AM | அ+அ அ- |

அரியலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரியலூா் புது மாா்க்கெட் தெருவில் வசித்து வருபவா் சுரேஷ். இவா், துக்க நிகழ்வுக்காக ஜூன் 5 ஆம் தேதி குடும்பத்தினருடன் பெரம்பலூா் மாவட்டம் பசும்பலூா் கிராமத்துக்கு சென்றாா்.
இந்நிலையில், புதன்கிழமை ஊருக்கு திரும்பிய சுரேஷ், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் நகைகள், ரூ.1,000 பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் கயா்லாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.