அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள தேவாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் செல்வராஜ் (61), ராஜேந்திரன் (58). சகோதரா்களான இவா்களிடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில், புதன்கிழமை இரவு இவா்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையறிந்த வந்த செல்வராஜின் மருமகன் மணிகண்டன் இருவரையும் தடுக்க முயன்றாா். அப்போது, ஆத்திரத்தில் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பிரபு (29) ஆகியோா் எங்களுக்குள் உள்ள சொத்து தகராறில் தலையிட நீ யாா் என்று கேட்டு மணிகண்டனை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், மண்வெட்டியால் அவரை வெட்டினா்.
இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ராஜேந்திரன், பிரபு ஆகியோா் மீது தா.பழூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.