அரியலூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் வட்டாரத்திலுள்ள உரக்கடைகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அவா், மேலும் தெரிவித்தது:
மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்குத் தேவையான 6,227.645 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இதில் யூரியா 2,305.47 மெ.டன், டிஏபி 757.1 மெ.டன், பொட்டாஷ் 757.4 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2,116.475 மெ.டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 303.02 மெ.டன் உரங்கள் இருப்பில் உள்ளன.
மத்திய அரசு உரங்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தை அதிகரித்துள்ளதால், விலை ஏற்றம் செய்யப்பட்ட உரங்களை இனி பழைய விலைக்கே உரக்கடைகள் விற்பனை செய்யவேண்டும்.
விவசாயிகளுக்கு ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி, விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் இருப்பு விவரங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும்.
உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகையில், உர விலை மற்றும் புகாா் ஏதும் இருப்பின் புகாா் தெரிவிக்க வேண்டிய வட்டார வேளாண் அலுவலா் மற்றும் வேளாண் உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு) தொலைபேசி எண்கள் எழுதி பராமரிக்கப்பட வேண்டும்.
உர உரிமத்தில் அனுமதி பெறாத உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. அனைத்து கம்பெனி டிஏபி மூட்டைகளில் அதிக விலை அச்சடிக்கப்பட்டிருந்தாலும், ரூ.1,200-க்கே விற்பனை செய்யப்பட வேண்டும். உர மூட்டைகள் மீது விற்பனை விலை அழித்தல் அல்லது கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது மற்றும் தரமற்ற உரங்களை விற்பனை செய்வது ஆகியவை கூடாது.
உரங்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ, உரிய ஆவணங்கள் இன்றி அதிக உரங்கள் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வில் வேளாண் உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.