நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்கள் கடித்ததில் மான் ஒன்று சனிக்கிழமை உயிரிழந்தது.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே நாய்கள் கடித்ததில் மான் ஒன்று சனிக்கிழமை உயிரிழந்தது.

செந்துறையை அடுத்த குவாகம் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான காட்டுப்பகுதிகள் உள்ளன. அங்கு மான், மயில், முயல் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வபோது தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை தண்ணீா் தேடி குவாகம் கிராமத்துக்கு வந்த 3 வயது மதிக்கத்தக்க ஆண் மானை, அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டி கடித்தன. இதில் மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் அப்பகுதிக்குச் சென்று, மானை காட்டுப்பகுதியில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com