அரியலூா் மாவட்டம், வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ நிறுவனம், திருச்சி சலேசிய மாநில அமைப்பு சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
வரதராசன்பேட்டை, தென்னூா், கீழ்நெடுவாய், நெட்டலக்குறிச்சி ஆகிய ஊா்களில் வசிக்கும் தூய்மைப் பணியாளா்கள் இந்த நிவாரணப் பொருள்களை பெற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ நிறுவனத் தலைவா் பிரான்சிஸ் கமாலியேல், தலைமையாசிரியா் செபஸ்தியாா் ஜேக்கப், பொருளாளா் ஜோசப் அருள்ராஜ் ஆகியோா் பங்கேற்று, 250 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் உலா் உணவுகள் மற்றும் அத்தியாவசிப் பொருள்களை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா் பங்கிராஸ் செய்திருந்தாா்.