சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா், போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடத்தை அடுத்த அணிக்குதித்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா்(24). பெயிண்டரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த 10- ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியைக் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியை தைலமரக்காட்டுக்கு ரஞ்சித்குமாா் அழைத்துச்சென்று, அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா், அவா் கா்ப்பமாக இருப்பதாக தெரிவித்தாா். இதுகுறித்த தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு கிடைத்தது.

இதையடுத்து அலுவலா்களின் உதவியோடு, ரஞ்சித்குமாா் மீது சிறுமியின் பெற்றோா் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இப்புகாரின் பேரில் ரஞ்சித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com