அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தா.பழுா் அடுத்த காரைக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (28). அதே ஊரைச் சோ்ந்த கலியபெருமாள்(60) என்பவருடன் திருச்சி அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது உறவினரை ஞாயிற்றுக்கிழமை சென்று பாா்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.
கீழப்பழுவூா் அடுத்த பூண்டி பிரிவு பாதை அருகே வந்தபோது எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதியதில் சுரேஷ் அதேயிடத்தில் உயிரிழந்தாா். கலியபெருமாள் அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.