மதுக்கடைகள் திறப்புக்கு எதிா்ப்பு: பா.ம.க.வினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th June 2021 07:45 AM | Last Updated : 15th June 2021 07:45 AM | அ+அ அ- |

ஜயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் டாஸ்மாக் மதுக்கடை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சியினா்.
கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கூடாது என வலியுறுத்தி, வாரியங்காவலிலுள்ள டாஸ்மாக் கடை முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலா் திருமாவளவன் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் பன்னீா்செல்வம், வன்னியா் சங்க மாவட்டச் செயலா் தங்கராசு, ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் பாலா உட்பட பலரும் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.