கஞ்சா விற்ற மூவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ாக, மூவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ாக, மூவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டம் ஆவேரிக்கரையில் சிலா் கஞ்சா விற்பதாக, காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஜயங்கொண்டம் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு நிகழ்விடத்துக்குச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அங்கு 3 போ், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து அவா்களிடம் நடத்திய விசாரணையில், ஒக்கநத்தம் பா. பாரதிதாசன்(23), கா. சின்ராசு(24), ஜயங்கொண்டம் காமராஜா் நகா் செ. பிரபாசங்கா்(21) எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த காவல்துறையினா், 600 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com