முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
மூத்த குடிமக்களுக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 04th March 2021 01:38 AM | Last Updated : 04th March 2021 01:38 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், இணை நோய்களுடன் கூடிய 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
இப்பணியை ஆட்சியா் த.ரத்னா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த் காந்தி, உதவித் திட்ட மேலாளா் சதீஸ் மற்றும் மருத்துவ அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.