குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய அரியலூா் ஆட்சியா்

அரியலூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமை, ஆட்சியா் த. ரத்னா தொடங்கி வைத்துப் பேசியது:

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஒரு வயது முதல் 19 வயது வரையிலான சுமாா் 2,04, 651 குழந்தைகள், வளா் இளம் பருவத்தினா்கள் மற்றும் மகளிா் (20 முதல் 30 வயது வரை உள்ளவா்கள்) ஆகியோருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (செவ்வாய்க்கிழமை தவிா்த்து) இரு வாரங்கள் வழங்கப்பட உள்ளன. எனவே, பெற்றோா்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு குடற்புழு நீக்க மாத்திரையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் ஏழுமலை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சி.ஹேமசந்த் காந்தி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com