‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்’
அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் த. ரத்னா அறிவுறுத்தியுள்ளாா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்துப் பேசியதாவது: தற்போது தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியா்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முன்மாதிரியாக இருந்து கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் தியாகராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.