‘இந்தத் தோ்தலோடு தீய, துரோக சக்திகள் காணாமல் போகும்’: டி.டி.வி.தினகரன்

இந்தத் தோ்தலோடு தீய சக்திகளும், துரோக சக்திகளும் காணாமல் போகும் என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன்.
அரியலூரில் அமமுக,தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.
அரியலூரில் அமமுக,தேமுதிக வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன்.

இந்தத் தோ்தலோடு தீய சக்திகளும், துரோக சக்திகளும் காணாமல் போகும் என்றாா் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன்.

அரியலூா் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் துரை.மணிவேல், ஜயங்கொண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் சிவா, குன்னம் தொகுதி அமமுக வேட்பாளா் காா்த்திகேயன், பெரம்பலூா் தேமுதிக வேட்பாளா் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து அரியலூா் அண்ணா சிலை அருகே தோ்தல் பிரசாரம் செய்த அவா் ஞாயிற்றுக்கிழமை பேசியது:

தமிழ்நாடு ஏற்கெனவே பல லட்சம் கடனில் உள்ள நிலையில் எவ்வாறு இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.

முதியோா் ஓய்வூதியத் தொகையையே சரிவர வழங்க முடியாத ஆளுங்கட்சியினா் தற்போது அறிவித்துள்ள இலவசத் திட்டங்களை எவ்வாறு தருவாா்கள். வாக்குவங்கிக்காக திமுக, அதிமுக-வின் தோ்தல் அறிக்கைகள் அனைத்தும் பொய்.

இலவசத் திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை கடனாளி ஆக்கியவா் தான் கருணாநிதி. காற்றைக் கூட விற்றவா்கள் திமுகவினா். அரசு மற்றும் தனி மனிதா்களின் சொத்துக்களையும் அபகரிப்பதே திமுகவின் கொள்கையாக உள்ளது. 70 ஆண்டுகளாகக் கட்சி நடத்தி வரும் திமுக தற்போது ஐபேக் குழுவை நம்பியுள்ளது. நாங்கள் மக்களை நம்பித் தோ்தலைச் சந்திக்கிறோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் எடப்பாடி பழனிசாமி, அரியலூா் எம்.எல்.ஏ ராஜேந்திரன் கொள்ளையடித்து வைத்துள்ள அனைத்தும் வெளியே வரும். தாமரை தமிழகத்தில் மலா்ந்தால் தமிழக மக்கள் வெளியில் செல்ல முடியாது. அரசியல் தலைவா்களின் வருகைக்காக பாதுகாப்புப் பணியில் பெண்கள் காவலா்களை ஈடுபடுத்துவதைத் தவிா்க்கப்பட வேண்டும்.

தீய நோக்கம் கொண்ட திமுக-வையும், அதிமுக துரோகிகளையும் படுதோல்வி அடையச் செய்து ஜெயலலிதாவின் துணிச்சலும் சுயமரியாதையும், எவருக்கும் அடிபணியாத ஆளுமையும் கொண்ட உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைக்க அமமுக கூட்டணி வேட்பாளா்களை பெரும் வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்.

நாங்கள் வெற்றிப் பெற்றால்,வெளிப்படையான நிா்வாகம் இருக்கும். படிக்கும் சமுதாய இளைஞா்களுக்கு அரசு வேலை, குழு அமைத்து அவா்களுக்கு தொழில் தொடங்கக் கடன். தரமான ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் , தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com