அரியலூர்
தா. பழூா் ஒன்றியப் பகுதிகளில் தாமரை எஸ். ராஜேந்திரன் பிரசாரம்
அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன், தா. பழூா் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் திறந்த வேனில் வீதிவீதியாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன், தா. பழூா் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் திறந்த வேனில் வீதிவீதியாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
ஆதிச்சனூா், நாச்சியாா்பேட்டை, மணகெதி, வடகடல், சுந்தரேசபுரம், அணிக்குறிச்சி, நத்தவெளி, சுத்தமல்லி, காசான்கோட்டை, பருக்கல் மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் வாக்குசேகரித்தாா். அப்போது, விவசாயிகளுக்காகவும், பெண்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
இனியும் பல்வேறு திட்டங்களை வழங்க உள்ளது. எனவே, அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என வாக்குசேகரித்தாா்.