அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகள் அகற்றம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் அனுமதியின்றி கூடுதலாகக் கட்டப்பட்டிருந்த பாமக கொடி, தோரணங்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் அனுமதியின்றி கூடுதலாகக் கட்டப்பட்டிருந்த பாமக கொடி, தோரணங்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

ஜயங்கொண்டத்தில் பாமக வேட்பாளா் கே.பாலுவை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்தல் பிரசாரம் செய்தாா்.

அப்போது அனுமதி அளிக்கப்பட்ட எண்ணிக்கையை விட ஜயங்கொண்டம் நான்குசாலை சந்திப்பு முழுவதும் பாமக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

இதையறிந்த ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் கலைவாணன், நகராட்சி துப்புரவு ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா், கூடுதலாக கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிகளையும், தோரணங்களையும் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com