அரியலூா் முன்மாதிரி நகரமாக்கப்படும் என்று அமமுக வேட்பாளா் துரை.மணிவேல் தெரிவித்தாா்.
அரியலூா் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வாா்டுகளிலும் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த அவா், நான் வெற்றிபெற்றவுடன், அரியலூா் நகராட்சிக்கு எல்லைக்கு அருகாமையிலுள்ள கிராமங்களை நகராட்சியுடன் இணைத்து அரியலூா் முன்மாதிரியாக்கப்படும். அரியலூா் பேருந்து நிலையம் சீரமைக்கப்படும். அனைத்து வாா்டுகளிலும் சுகாதார நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்தாா். இதில், தேமுதிக மாவட்டச் செயலா் இராமஜெயவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்குசேகரித்தனா்.