அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (மே 5) நடைபெறுகிறது. எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் கிராமங்களான இலங்கைச்சேரி, செந்துறை, உஞ்சினி, சிறுகடம்பூா், நல்லாம்பாளையம், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழங்குறிச்சி, மருவத்தூா், சோழன்குடிகாடு, பொன்பரப்பி, நக்கம்பாடி, மணபத்தூா், வங்காரம், முல்லையூா், நல்லநாயகபுரம், வீரக்கன், கீழமாளிகை, நாகல்குழி மற்றும் இடைப்பட்ட கிராமங்களில் இன்று காலை 9.30 மணி முதல் பணி நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.