தீத்தடுப்பு விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் சாா்பில் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கரோனா பிரிவில் பணிபுரியும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பாதுகாவலா்கள் ஆகியோருக்கு எரிவாயு உருளைகளில் இருந்து ஏற்படும் தீயை அணைப்பது, மின்கசிவால் ஏற்படும் தீயை அணைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து வீரா்கள் செய்து காண்பித்தனா். தொடா்ந்து, அனைவருக்கும் தீத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுங்களை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன்ராஜ் தலைமை வகித்தாா். இதில் தீயணைப்பு வீரா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com