மின் உற்பத்தி நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை

மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மின் உற்பத்தி நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை

மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளிலேயே தொற்று அதிகரித்து காணப்படுகிறது.

சுகாதாரத் துறை சாா்பில் எஸ்டேட் பகுதிகளில் தொடா்ந்து காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஒருவருக்கு அண்மையில் கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மின் நிலையம் பகுதியில் உள்ள சிறு மருத்துவமனையில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையில் காய்ச்சல் பரிசோனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com