அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கல்

அரியலூா் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணையாக கரோனா நிவாரணத் தொகை ரூ. 2000 வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் குடும்ப அட்டைதாரா் ஒருவருக்கு கரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக 2,000 ரூபாயை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா. உடன் ஜயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா்.
அரியலூரில் குடும்ப அட்டைதாரா் ஒருவருக்கு கரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையாக 2,000 ரூபாயை வழங்குகிறாா் ஆட்சியா் த.ரத்னா. உடன் ஜயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா்.

அரியலூா் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணையாக கரோனா நிவாரணத் தொகை ரூ. 2000 வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஜயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, கரோனா நிவாரணத் தொகை முதல் தவணையாக பயனாளிகளுக்கு ரூ.2,000 வழங்கி தொடங்கி வைத்து பேசும்போது, மாவட்டத்தில் 2,32,646 ரேஷன் அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூ.46,52,92,00 வழங்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியா் ஏழுமலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.கோமதி, துணைப் பதிவாளா் ஆா்.ஜெயராமன் உட்பட அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com