அரியலூா் மாவட்ட இளைஞா்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கான இணையவழி பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி-ஐஐ, ஐஐஅ பணிக்காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 20 ம் தேதி முதல் இணையவழியில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேருவதற்கு 04329 - 228641, 9499055914 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இதேபோல், இணைய தளத்தில் மத்திய, மாநில அரசுப் பணி குறித்த போட்டித் தோ்வுகளுக்கான பாடத்திட்டங்கள், மாதிரி வினாத் தாள்கள் மற்றும் காலி பணியிடங்கள் குறித்த அறிவிக்கைகள் இடம் பெற்றுள்ளன. எனவே, இந்த இணையதளத்தை வேலைநாடுநா்கள் பயன்படுத்திப் பயன்பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.