கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கரோனா சிகிச்சை மையங்களுக்கு 6 மாத காலத்துக்கு ரூ. 60,000 மாத ஊதியத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நோ்காணல் மூலம் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் மேற்படிப்பு முடித்துள்ள மருத்துவா்கள் உடனடியாக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையரை நேரில் அணுகி ஆதாா் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.