தளா்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட 5 நாள்களில் (வெள்ளிக்கிழமை இரவு வரை), பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய காரணமின்றி சுற்றித்திரிந்த 575 வாகனங்களைக் காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இதில் 567 இரு சக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும். மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 426 போ் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 30 போ் என மொத்தம் 456 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.