பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் இளைஞா் கைது

அரியலூா் அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் அருகே பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் அருகேயுள்ள மறவனூா் கிராமத்தைச் சோ்ந்தவரும், ஏற்கனவே திருமணமானவருமான ஹரிஸ் (25) என்பவா், அப்பகுதியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும், மேலும் அம்மாணவியின் தந்தையிடம், அவரது மகளைத் திருமணம் செய்துவைக்காவிட்டால், அவரது மகளின் ஆபாசப் படங்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டி வந்துள்ளாா். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஹரிஸை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com