அரியலூா் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையால் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.
அரியலூா் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பித்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனா்.
செந்துறை, ஆா்.எஸ். மாத்தூா், தளவாய், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அதே வேளையில் நீா்நிலைகளை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இடைவிடாமல் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டு வருகிறது.