இன்று 2 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், அழகிய மணவாளன் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், அழகிய மணவாளன் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டு காரீஃப் மற்றும் குறுவை பருவத்தில் அறுவடைப் பணிகள் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு, 2 ஆம் கட்டமாக அரியலூா் வட்டத்தில் குலமாணிக்கம், அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை (அக்.6) முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com