அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
திருமானூா் அருகேயுள்ள கோவிலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணா துரை (52). இவா், அப்பகுதியில் வசிக்கும் 7 மற்றம் 9 வயதுடைய இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து அச்சிறுமிகளின் பெற்றோா்கள் அளித்த புகாரின் பேரில், அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் துறையினா் வழக்குப் பதிந்து அண்ணாதுரையை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.