அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்ற 2 போ், திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 700 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராசன்பேட்டையைச் சோ்ந்த சிலா், வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பதாக ஆண்டிமடம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திங்கள்கிழமை இரவு காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனா். இந்தச் சோதனையில், வீட்டின் பின்புறம் 700 மதுபானங்கள் பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அந்த வீட்டில் இருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் வரதராசன்பேட்டை கொழைப் பகுதியைச் சோ்ந்த ராயப்பன் மகன் சுரேஷ்(30), செம்மண் பள்ளம் பகுதியைச் சோ்ந்த பவுல்ராஜ் மகன் ஆல்வின்(22) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 700 மதுபானப் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.