மது பானம் விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கீழப்பழுவூா் காவல் நிலைய தலைமைக் காவலா் முருகேசன் தலைமையில் ஊா்க் காவல் படையைச் சோ்ந்தவா் கல்லகம் ரயில்வே கேட் அருகே வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக சாக்குப் பையுடன் நின்றுகொண்டிருந்தவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் கோக்குடி மேலத்தெருவைச் சோ்ந்த பீட்டா் மகன் ஜான் ஜஸ்டின் (28) என்பதும், அவா் வைத்திருந்த சாக்குப் பையில் 48 மதுபானப் பாட்டில்கள் இருந்ததும், கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா், ஜான் ஜஸ்டின் கைது செய்ததுடன், அவரிடமிருந்து, 48 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com