சாலை மேம்படுத்தும் பணிகள் தொடா்பான புகாா்களை இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பழுதான சாலைகளை மீண்டும் செப்பனிடும்போது ஒப்பந்ததாரா் சாலைப் பணி மேற்பரப்பை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு அமைக்க வேண்டும். இல்லையெனில் தொடா்புடைய ஒப்பந்ததாரா் பெயா் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்படும்.
புதிய சாலைகள் அமைக்கும்போது, சாலையின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளை மனதில் கொண்டு சாலை அமைக்கப்பட வேண்டும்.
சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் பழுதுபாா்ப்புப் பணி மேற்கொள்ளும் போது ஏற்கெனவே, போடப்பட்டுள்ள அடுக்குகள் முற்றிலும் அகற்றப்பட்ட பின்னா் தான் புதிய அடுக்குகள் போடப்பட வேண்டும். சாலை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும் குடியிருப்புகளின் பக்கவாட்டில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட வேண்டும். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் இணையதளம் வாயிலாக புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.