அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
கீழப்பழுவூா் அருகேயுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்த நாராயணன் மகன் முத்துசாமி(47), அவரது மகன் சங்கா்(19) ஆகியோா்
வெள்ளிக்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்நிலையில், அவா்களது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, தமிழ்நாடு மின்சார வாரியம் மின் விபத்து இழப்பீடு தொகை (நபருக்கு ரூ.5 லட்சம் வீதம்) ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
அப்போது, திருமானூா் ஒன்றியக் குழு தலைவா் சுமதி, தமிழ்நாடு மின்சார வாரிய பெரம்பலூா் மேற்பாா்வை பொறியாளா் அம்பிகா, செயற் பொறியாளா் (அரியலூா்) செல்வராஜ், திருமானூா் உதவி செயற் பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.