அரியலூா்: அரியலூரில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 6 ஆவது ஒன்றிய மாநாட்டில், அரியலூா் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 வேலைாய்ப்பு திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும். இந்த திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுப் படுத்திட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்
என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், ஒன்றிய செயலாளராக அருணன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
மாநாட்டுக்கு அக்கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாக்கியம், சந்தானம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் மணிவேல் பங்கேற்ற மாநாட்டினை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ப. துரைசாமி, இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினா் த.சிற்றம்பலம் வரவேற்றாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கிருஷ்ணன் நன்றி தெரிவித்தாா்.