அரியலூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை முதல் அதிகாலை வரை பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 2 தினங்களாக அரியலூா் நகரில் 10 செ.மீட்டா் அளவு மழை பெய்துள்ளது. அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழையின் அளவு. அரியலூா் 10 செ.மீ, ஜயங்கொணடம் 60 மி.மீ, திருமானூா் 74.2 மி.மீ, செந்துறை 20 மி.மீ, ஆண்டிமடம் 31 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.