ஆவின் பால் முகவரை மாற்றக்கோரி அமைச்சரிடம் மனு

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூா் கிராமத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலைய முகவரை மாற்றக்கோரி கிராம மக்கள் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அரியலூா் மாவட்டம், பெரியநாகலூா் கிராமத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலைய முகவரை மாற்றக்கோரி கிராம மக்கள் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பெரியநாகலூா் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு முறையாகப் பணம் தரவில்லை. எனவே கொள்முதல் நிலைய முகவரை மாற்றக்கோரி அண்மையில் (அக். 9 ) பெரியநாகலூா், சின்னநாகலூா், காட்டுப்பிரிங்கியம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் மறியலில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா். இந்நிலையில், ஜயங்கொண்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், காரில் சென்ற போது, பெரியநாகலூா் பிரிவுப் பாதை அருகே திரண்ட மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள், பால் கொள்முதல் நிலைய முகவரை மாற்றக்கோரி மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com