அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா். தொடா்ந்து அண்ணாசிலை மற்றும் கடைவீதியுள்ள எம்.ஜி.ஆா் சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியை ஏற்றி வைத்தாா்.
நிகழ்வில், தாமரைகுளம் ஊராட்சித் தலைவா் பிரேம்குமாா், மாவட்ட மாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஜயங்கொண்டத்தில் உள்ள எம்.ஜி.ஆா் மற்றும் அண்ணாசிலைகளுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல் செந்துறை, தா.பழூா், ஆண்டிமடம், கீழப்பழுவூா், திருமானூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எம்.ஜி.ஆா், ஜெயலலிதா மற்றும் அண்ணாசிலைகளுக்கு அதிமுக-வினா் மாலை அணிவதித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.