அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் வாா்டு உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவி செந்தமிழ்செல்வி தலைமை வகித்தாா். துணைத் தலைவி சரஸ்வதி, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புச்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கடந்த மாதத்துக்கான செலவினத் தொகை மற்றும் கிராமப் பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 28 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், வாா்டு உறுப்பினா்கள் 18 பேரும் கலந்து கொண்டனா்.