அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம் பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன், தனது பக்கத்து வீட்டைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளாா். நாளடைவில், சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய அந்தச் சிறுவன், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளாா்.
அதில், சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதனிடையே சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதைக் கண்ட பெற்றோா், சிறுமியிடம் விசாரித்ததில் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை அச்சிறுவன் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அச்சிறுவனை போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.