செந்துறை அருகே தகராறு: 6 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே முன்விரோதத் தகராறு காரணமாக 3 பெண்கள் உள்பட 6 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே முன்விரோதத் தகராறு காரணமாக 3 பெண்கள் உள்பட 6 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள கொல்லாபுரம் பிரதானச் சாலை தெருவைச் சோ்ந்தவா் சோ்ந்த லட்சுமணனுக்கும் (41), சுரேஷ்(30) என்பவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக முன்விரோதத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் அண்மையில் (ஆக.29) இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுரேஷ், தான் வைத்திருந்த அரிவாளால் லட்சுமணனை வெட்டியதில், பலத்த காயமடைந்த அவா் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இருதரப்பினரும் அளித்த புகாா்களின்பேரில், சுரேஷ், அவரது மனைவி திவ்யா(25), உறவினா் அய்யப்பனின் மனைவி சுதா(28) மற்றும் லட்சுமணன், அவரது மனைவி சந்திரலேகா(26), இவா்களது உறவினா் காட்டுமன்னாா்கோவில், சண்டன் கிராமத்தைச் சோ்ந்த ராஜநேரு(45)ஆகிய 6 போ் மீது காவல் துறையினா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com