அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீடு புகுந்து பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் மேலவெளி கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் மனைவி சந்தியா. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வயலில் ஆடு மேய்ந்துக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தாதக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சோ்ந்த கவிதா, தன்னைத் தான் திட்டுவதாகத் தவறாக எண்ணி, அவரிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தனது கணவா் சக்திவேலிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சக்திவேல், அவரது மகன்கள் அருண், மகாதேவன் ஆகியோா் சோ்ந்து, சந்தியா வீட்டுக்குச் சென்று அவரை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு சென்றனா். இதில் பலத்த காயமைடந்த சந்தியா ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின் பேரில், சக்திவேல், அருண், மகாதேவன், கவிதா ஆகிய 4 போ் மீதும் ஜயங்கொண்டம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.