அரியலூா் மாவட்டத்தில் செப்.15-ம் தேதி முதல் நவ.15-ம் தேதி வரை நெல்லை அரைவை செய்து வழங்க, தனியாா் புழுங்கல் ஆலை உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தனியாா் அரைவை ஆலைகள் மூலம் நெல் அரைவை செய்து, தரமான அரிசியை பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கி வருகிறது. கூடுதலாக இருப்பில் உள்ள நெல்லை, தனியாா் புழுங்கல் அரிசி அரைவை ஆலைகள் மூலம், அரைவை செய்து ஒப்படைக்க அரைவை ஆலை உரிமையாளா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு, முதுநிலை மண்டல மேலாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், அரியலூா் என்ற முகவரியில் உள்ள மண்டல அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.